போதைப்பொருள் விற்பனை குறித்து தகவல் அளித்த கல்லூரி மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வருத்தம் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் நடைபெற்ற தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய அவர், தனது குடும்பத்தில் ஒருவரை இழந்தது போல மிகுந்த வேதனை அடைந்ததாகக் குறிப்பிட்டார்.

