இந்தியாவில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட சுமார் 8.7 கோடி இளைஞர்கள் கல்வி, வேலைவாய்ப்பு அல்லது பயிற்சி என எதிலும் ஈடுபடாமல் இருப்பதாக நிதி ஆயோக் அறிக்கை தெரிவித்துள்ளது. 2021-ஆம் ஆண்டின் தேசிய மாதிரி ஆய்வுத் தரவுகளின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. முந்தைய கல்வியில் முதலீடு செய்திருந்தும், வருமானம் ஈட்ட முடியாத சூழலில் உள்ள இந்த இளைஞர்கள் பெரும் நிதி நெருக்கடியைச் சந்திப்பதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், வழக்கமான பட்டப்படிப்புகளுடன் கூடுதல் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளைப் பெறுவதில் பொருளாதார ரீதியாகப் சிரமப்படுகின்றனர். இதனால், பலர் குடும்பச் சூழல் காரணமாகக் குறைந்த ஊதியத்தில் வேலைக்குச் செல்கின்றனர் அல்லது வேலைவாய்ப்புச் சந்தையில் நுழைய முடியாமல் தவிக்கின்றனர். தற்போது பட்டதாரிகளில் 8.25 சதவீதம் பேர் மட்டுமே தங்கள் கல்வித் தகுதிக்கு ஏற்ற வேலைகளில் இருப்பதாகக் குறிப்பிடும் அந்த அறிக்கை, கல்விக்கும் தொழில்துறைத் தேவைக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்துகிறது.
இந்தச் சவால்களை எதிர்கொள்ள, உள்ளூர் தேவை மற்றும் வளர்ந்து வரும் துறைகளுக்கு ஏற்ப மானியத்துடன் கூடிய பயிற்சித் திட்டங்களையும், நிதி உதவிகளையும் வழங்க வேண்டும் என நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது.


