சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில் இருப்பது தான் இல்லை என அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார். ஒருவேளை அது தானாகவே இருந்தாலும், அதில் என்ன தவறு உள்ளது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெண்களின் உடை, தோற்றம் மற்றும் மகிழ்ச்சி ஆகியவை ஏன் பொது விவாதப் பொருளாக மாறுகிறது என்று அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். அரசியல் ரீதியாக விவாதிக்க முடியாதவர்கள், தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். பெண் வெறுப்பு என்பது ஒரு பழமையான ஆயுதம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.


