கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் அம்மாநில வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செயலுக்குத் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்யுமாறு தமிழக அரசை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மேகதாது விவகாரத்தைப் போலவே இந்த விவகாரத்திலும் தமிழக அரசு வாய்மூடி மௌனம் காக்கக் கூடாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

