இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, விசா நேர்காணலுக்கு விண்ணப்பிக்கும் பச்சிளம் குழந்தைகள் உட்பட அனைத்து மைனர் குழந்தைகளும் நேரில் ஆஜராக வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
விசா விண்ணப்ப நடைமுறைகளை நிறைவு செய்ய, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைத் தூதரகத்தின் தூதரகப் பிரிவுக்கு அழைத்து வர வேண்டும் எனத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.


