மேகமலை புலிகள் சரணாலயப் பகுதிகளில் உள்ள இலவம் பஞ்சு தோட்டங்களை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் மீண்டும் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது. வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் எவ்வித சமரசமும் இருக்கக்கூடாது என்பதில் நீதிமன்றம் உறுதியாக உள்ளது.
ரிசர்வ் வனப் பகுதிகளில் யாருக்கும் பட்டா வழங்கக்கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஆக்கிரமிப்பாளர்கள் அமைத்துள்ள கட்டிடங்களுக்கான மின்சாரம் மற்றும் நீர் இணைப்புகளை உடனடியாகத் துண்டிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், இப்பகுதிகளைப் பாதுகாக்க துணை ராணுவப் படையினரை ஈடுபடுத்தவும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

