உலகளாவிய நிதி மேலாளர்கள் அதிகம் தவிர்க்கும் ஆசிய பங்குச்சந்தைகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. பேங்க் ஆஃப் அமெரிக்கா நடத்திய புதிய ஆய்வில், இந்திய பங்குச்சந்தை -32 சதவீத நிகர முதலீட்டு மதிப்பீட்டுடன் பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் உலகளவில் பெரும் வளர்ச்சி நிலவி வரும் சூழலில், இந்திய சந்தையில் போதுமான செயற்கை நுண்ணறிவு சார்ந்த நிறுவனங்கள் இல்லாததே முதலீட்டாளர்களின் இந்த முடிவுக்குக் காரணம் என 32 சதவீத முதலீட்டாளர்கள் கருதுவதாக அந்த ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.





