விருதாச்சலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என தேமுதிக எம். எல்.
ஏ பிரேமலதா விஜயகாந்த் சட்டப்பேரவையில் வலியுறுத்தியுள்ளார். திட்டக்குடி, நெய்வேலி மற்றும் விருதாச்சலம் ஆகிய பகுதிகளில் இருந்து மாவட்டத் தலைநகரான கடலூருக்குச் செல்வதற்கு அதிக தூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மக்களின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


