மகளிரைத் தொழில்முனைவோராக ஊக்குவிக்கும் நோக்கில், 'சிங்கப்பெண்கள் கடன் திட்டம்' என்ற புதிய திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்திற்காக ரூ.7,015 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

