சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை செய்ய திமுகவிற்கு தைரியம் இல்லை என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்தும், பேரவை நிகழ்வுகளை நேரலை செய்யாதது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளில் திமுகவினர் ரீல்ஸ் செய்வதிலும், பாடல்கள் பாடுவதிலும் மட்டுமே கவனம் செலுத்தியதாக அவர் குற்றம் சாட்டினார். நாடாளுமன்றத்தில் பதவியேற்பின் போது பெரியார் அல்லது அண்ணா குறித்து பேசாமல், வேறு யாரைப் பற்றி பேசினார்கள் என்பது மக்களுக்குத் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஜனநாயகத்தைக் காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பேரவை நிகழ்வுகளைத் துணிச்சலுடன் நேரலை செய்தவர் எங்கள் முதல்வர் என்றும் அவர் தெரிவித்தார்.

