தனியாருக்கு இணையாக ஒரு லிட்டர் பாலுக்கு 50 ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்றது. பவத்தூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் தொழிலைப் பாதுகாக்க கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
அரசு அறிவித்துள்ள 3 ரூபாய் விலை உயர்வு ஏமாற்றம் அளிப்பதாக பால் உற்பத்தியாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பாலுக்கு உரிய விலை கிடைக்காத நிலையில், எம்.எல்.ஏ.க்களுக்கு கார்கள் எதற்கு என அவர்கள் கேள்வி எழுப்பினர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை மறுநாள் முதல் ஆவினுக்கு பால் வழங்குவதை நிறுத்தப்போவதாக உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.

