திமுகவில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கட்சிப் பதவிகளை வழங்க வேண்டும் என அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார். சென்னையில் நடைபெற்ற திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.
கட்சிப் பதவிகளில் இருந்தே மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். இந்த கோரிக்கையை முன்வைத்து அவர் கட்சி மேலிடத்திடம் தனது கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்.

