கடந்த ஆண்டு நடைபெற்ற 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது, இந்தியாவிற்குச் சொந்தமான ட்ரோன் ஒன்று தவறுதலாக பாகிஸ்தானின் கிரானா ஹில்ஸ் அணுசக்தி மையத்தில் மோதியதை முன்னாள் பாதுகாப்புத் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் உறுதிப்படுத்தியுள்ளார்.
சர்கோதா அருகே ரேடார் இலக்குகளைத் தேடிக்கொண்டிருந்தபோது, எரிபொருள் தீர்ந்ததால் இஸ்ரேலிய தயாரிப்பான 'ஹரோப்' ரக ட்ரோன் அந்த மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதாக அவர் விளக்கமளித்தார். இது திட்டமிட்ட தாக்குதல் அல்ல என்றும், இலக்கைக் கண்டறிய முடியாத சூழலில் ட்ரோன் தரையிறங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஸ்கர்டு பகுதியில் தாக்குதல் நடத்த இந்திய விமானப்படை திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் மோசமான வானிலை காரணமாக அந்தத் திட்டம் கைவிடப்பட்டதாகவும் ஜெனரல் சவுகான் தெரிவித்தார். மே 10-ம் தேதி நடைபெற்ற வான்வழித் தாக்குதலில், போலாரியில் உள்ள விமானக் கொட்டகை (hangar) மீது துல்லியமாகத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.



