தமிழகத்தில் உள்ள தனித்தொகுதிகளை 'தனித்தொகுதி' என்று குறிப்பிடாமல், 'சிறப்புத் தொகுதி' அல்லது 'உரிமைத் தொகுதி' என்று அழைக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் சிந்து வலியுறுத்தியுள்ளார். ஒரு சொல் கொல்லும், ஒரு சொல் வெல்லும் என்று அவர் தனது கோரிக்கையை முன்வைத்தார்.
சட்டமன்ற உறுப்பினரின் இந்த கோரிக்கையை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் உறுதியளித்துள்ளார்.

