நூறு ஆண்டுகளுக்கு முன்பு 15,000 ஏக்கராக இருந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம், தற்போது 2,500 ஏக்கராகச் சுருங்கியுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். அடையாறு, இந்திரா நகர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் மற்றும் நாவலூர் உள்ளிட்ட பகுதிகள் சதுப்பு நிலத்தின் மீதுதான் அமைந்துள்ளன என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
எஞ்சியுள்ள 2,500 ஏக்கர் நிலத்தையாவது பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.


