தமிழக முதல்வர் விஜய்யின் அறக்கட்டளை பெயரில் மத்திய பிரதேசத்தில் பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபடும் கும்பல் குறித்து புகார்கள் எழுந்துள்ளன. முதல்வர் விஜய்யின் தொண்டு நிறுவனத்திலிருந்து பேசுவதாகக் கூறி, 10 லட்சம் ரூபாய் வரை உதவித்தொகை மற்றும் தொழில் நிதி பெற்றுத் தருவதாகத் தெரிவித்து இந்த மோசடி அரங்கேற்றப்படுகிறது. பதிவுக்கட்டணம், சரிபார்ப்புக் கட்டணம் மற்றும் செயல்பாட்டுக் கட்டணம் என்ற பெயரில் பொதுமக்களிடம் 1,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக இந்தூர் குற்றத் தடுப்புப் பிரிவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வடமாநிலங்களில் முதல்வர் விஜய்யின் பெயரைப் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் பரப்பப்படும் போலி வாக்குறுதிகளை நம்பி யாரும் பணம் அனுப்பி ஏமாற வேண்டாம் என இந்தூர் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது. இத்தகைய மோசடிச் செயல்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


