சட்டப்பேரவையில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக எம்.எல்.ஏ. சி.வி. சண்முகம் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் குறித்து பேசுவதற்கு தலவாய் சுந்தரத்திற்கு சபாநாயகர் அனுமதி அளித்ததை, முன்னாள் சட்டத்துறை அமைச்சரான சி.வி. சண்முகம் கடுமையாக எதிர்த்தார்.
அதிமுக சார்பில் பேசுவதற்கு தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக சி.வி. சண்முகம் வாதிட்டார். இந்த விவகாரம் அவைக்குள் கடும் வாக்குவாதத்திற்கு வழிவகுத்தது.

