சென்னையில் உள்ள ஐஸ்வர்யா, ஏ.ஆர்.சி மற்றும் பிரசாந்த் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட கருத்தரித்தல் மையங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரைத் தொடர்ந்து, நேற்று தொடங்கிய இந்தச் சோதனை இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சோதனை நடவடிக்கைகள் முழுமையாக நிறைவடைந்த பிறகே, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பான கூடுதல் விவரங்களை அதிகாரிகள் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.





