சென்னை தலைமைச் செயலகம் அருகே முதல்வர் விஜயின் காரை மறித்து, மானாமதுரையைச் சேர்ந்த ஆகாஷ் என்பவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த மார்ச் மாதம் நிகழ்ந்த ஆகாஷ் காவல் மரணம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட காவலர்களைக் கைது செய்ய வலியுறுத்தி அவர்கள் இந்த மறியலில் ஈடுபட்டனர்.
முதல்வரின் வாகனம் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர். காவல் மரணம் தொடர்பான மனுவை அளிப்பதற்காகவே அவர்கள் இந்த மறியலில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

