கோலாலம்பூரிலிருந்து சவுதி அரேபியாவின் ஜெட்டாவிற்கு 186 பயணிகளுடன் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
விமானத்தின் இரண்டாவது என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த அவசர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து விமான நிலையத்தில் முழு அளவிலான அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் விமானத்தில் பயணம் செய்த 186 பயணிகளுக்கும் எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



