சென்னையில் உள்ள ஆபத்தான கட்டடங்களைக் கண்டறிந்து அவற்றை அகற்றுமாறு மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடி நிபுணர்களைக் கொண்டு கட்டடங்களின் உறுதித்தன்மை குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த ஆய்வில் ஆபத்தானவை என உறுதி செய்யப்படும் கட்டடங்களை அந்தந்த உரிமையாளர்களே அகற்ற வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக அந்த கட்டடங்களை இடிக்கும் என்றும், அதற்கான செலவுத் தொகையை உரிமையாளர்களிடமே வசூலிக்கப்படும் என்றும் மாநகராட்சி ஆணையர் சமீர் தெரிவித்துள்ளார்.


