சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
இந்த புதிய தலைமைச் செயலகக் கட்டிடம் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில், 15 மாடிகளுடன் பிரம்மாண்டமாக அமைக்கப்பட உள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகள் மற்றும் கட்டமைப்பு குறித்த விவரங்கள் அந்த அரசாணையில் இடம்பெற்றுள்ளன.

