த.வெ.க மற்றும் முதல்வர் விஜய் குறித்து தி.மு.க தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் இன்று பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
“எதை பார்த்து த.வெ.கவில் சேர்ந்தார்கள்?” என்று ஆர்ப்பாட்டம் ஒன்றில் முதல்வர் விஜய் குறித்து ஆ.ராசா பேசினார்.
அதேபோல், த.வெ.க அமைச்சர்களை ஒருமையில் விமர்சித்து பூம்புகார் தி.மு.க எம்.எல்.ஏ. நிவேதா முருகன் பேசினார்.
தி.மு.க எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனும் முதல்வர் விஜய் குறித்து பேசினார்.
இதற்கிடையே, மேடையில் முதல்வர் விஜய் குறித்து ஆ.ராசா ஒருமையில் பேசியதுடன், “எனக்கு சந்தேகம் இருக்கு யாருக்கு பொறந்தனு?” என்று பேசினார்.
முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், “இந்தப் பேச்சை இதோட நிறுத்திக்கோங்க; இல்லனா தி.மு.க.காரங்க எந்த அளவுக்கு உங்களை அவமானப்படுத்திப் பேசுவாங்கனு உங்களுக்கே தெரியும்” என்று பேசினார்.
முன்னாள் அமைச்சர் சேகர் பாபு “ஓடுகாலி நாயே” என்று விமர்சித்தார்.
மேலும், “சட்டமன்றம் பாதுகாப்புனா எது வேணாலும் பேசுவியா?” என்ற விமர்சனமும் முன்வைக்கப்பட்டது.
திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் இரட்டை அர்த்தம் கொண்ட கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜய் மற்றும் த.வெ.கவை குறிவைத்து தி.மு.க தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் இன்று இவ்வாறு பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.


%2Fpolimer-news%2Fmedia%2Fmedia_files%2F2026%2F09%2F12%2Fnellaiprotestpowercut-2026-09-12-11-06-47.jpg&w=3840&q=75)
