தமிழகம் முழுவதும் 46 காவல் துணை கண்காணிப்பாளர்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து, காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காவல்துறை தலைமையகம் வெளியிட்டுள்ளது.
இந்த மாற்றத்தின்படி, எஸ்பிசிஐடி டிஎஸ்பியாக இருந்த சரஸ்வதி, சென்னை பெருநகர காவல் ஆணையரக உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜெகநாதன் திருப்பரங்குன்றம் உதவி ஆணையராகவும், பாளையங்கோட்டை உதவி ஆணையர் சரோஜா நெல்லை மத்திய குற்றப்பிரிவு டிஎஸ்பியாகவும் மாற்றப்பட்டுள்ளனர். மேலும், ஆவடி காவல் ஆணையரக குற்ற ஆவண காப்பக உதவி ஆணையர் முத்துராஜா லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பியாகவும், அதிதீவிர குற்றத்தடுப்பு பிரிவு உதவி ஆணையர் தமிழ்வாணன் பொன்னேரி காவல் உதவி ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.



%2Fpolimer-news%2Fmedia%2Fmedia_files%2F2026%2F09%2F12%2Fnellaiprotestpowercut-2026-09-12-11-06-47.jpg&w=3840&q=75)
