தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில், 'தமிழ்நாடு மூலோபாய முதலீட்டு ஆணையம்' (TNSIA) அமைக்கப்படவுள்ளது. இதற்காக 50,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் மூலம் முக்கிய துறைகளில் அரசு நேரடியாக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
குறைக்கடத்திகள், மின்சார வாகனங்கள், விண்வெளித் துறை, செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட உற்பத்தித் துறை உள்ளிட்ட அதிவேக வளர்ச்சி கொண்ட துறைகளுக்கு இந்தத் திட்டம் முன்னுரிமை அளிக்கிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சிறப்புத் திட்ட அமலாக்கத் துறையால் தயாரிக்கப்பட்ட 'வெற்றித் தமிழகம்' தொலைநோக்கு ஆவணத்தில் இந்தத் திட்டம் இடம்பெற்றுள்ளது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்




