காவிரி நீர் கிடைக்காததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 25,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விவசாயத்திற்குத் தேவையான மும்முனை மின்சாரத்தை 24 மணி நேரமும் தடையின்றி வழங்க வேண்டும் என்றும் அவர் தனது கோரிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்




