ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தன்னைச் சிக்க வைப்பதாகக் கூறி மிரட்டி 40 லட்சம் ரூபாய் பறித்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து பூக்கடை துணை ஆணையர் கோபி விசாரணை நடத்தி வருகிறார்.
அகில் குமார் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் தன்னிடம் பணம் பறித்ததாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்

