திருத்தணி முருகன் கோயிலில் நடைபெறவுள்ள ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக கூடுதலாக 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதையொட்டி, திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக அரக்கோணத்திலிருந்து திருத்தணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. திருத்தணி கோயிலில் நடைபெறும் விழாவிற்காக இந்த சிறப்பு போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்





