தமிழக சட்டப்பேரவையில் குறுவை சாகுபடி நிவாரணம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. குறுவை சாகுபடி நிவாரணம் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர் விஜய், அரசியல் ரீதியாக விமர்சிப்பவர்கள் செய்தித்தாள்களை முறையாகப் படிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "அரசு அறிவிக்கும் குறுவை சிறப்புத் தொகுப்பிற்கும், விவசாயிகள் கோரும் வறட்சி நிவாரணத்திற்குமான வேறுபாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும் எனக் கூறினார். செய்தித்தாள்களை மட்டும் படிக்காமல், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவசாயிகளிடம் நேரடியாகப் பேசி உண்மையை அறிய வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தினார்.
1விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்




