நிர்வாக வசதிக்காக மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளை மறுவரையறை செய்வதில் தவறில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முதல்வர் முன்மொழிந்த தீர்மானம் மீதான விவாதத்தின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.
மத்திய அரசு மேற்கொள்ளும் இந்த மறுவரையறை நடவடிக்கையில், தமிழகத்தின் பிரதிநிதித்துவம் 7.18 சதவீதத்திற்குக் குறையாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.



