இந்தியாவில் 14 மாநில முதலமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இந்த அறிக்கையில் முதலமைச்சர்கள் மற்றும் அவர்கள் மீதான வழக்குகளின் எண்ணிக்கை விவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
இதன்படி, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மீது அதிகபட்சமாக 89 கிரிமினல் வழக்குகள் உள்ளன. அதனைத் தொடர்ந்து மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி (29), கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் (19), ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு (19), கேரள முதலமைச்சர் சத்தீசன் (18) ஆகியோர் உள்ளனர். மேலும், ஹேமந்த் சோரன் (5), தேவேந்திர பட்னாவிஸ் (4), சுக்விந்தர் சிங் (4), விஜய் (2), சாம்ராட் சவுத்ரி (2), பிரேம் சிங் தமாங் (1), பகவந்த் மான் (1), மோகன் சரண் மாஜி (1) மற்றும் பஜன் லால் சர்மா (1) ஆகியோரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.



