மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டத்தில் உள்ள அரசு மகளிர் மருத்துவமனையில் இன்று அதிகாலை 3:30 மணியளவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், பிறந்த பச்சிளம் குழந்தைகள் 3 பேர் உயிரிழந்தனர். மருத்துவமனையின் மூன்றாவது தளத்தில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த வென்டிலேட்டர் வெடித்ததே இந்த விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்தபோது அங்கு மொத்தம் 39 குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்தனர்.
மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாகச் செயல்பட்டு குழந்தைகளை மீட்டனர். காயமடைந்த 6 குழந்தைகள் அருகில் உள்ள அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளனர்.


