வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களிடையே சாதி ரீதியான பாகுபாடுகளைக் காட்டக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பக்தர்களிடம் பாகுபாடு காட்டப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, இது தொடர்பான பொதுநல வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இறைவன் முன் அனைத்து உயிர்களும் சமம் என்ற பகவத் கீதை வாசகத்தைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், வழிபாட்டுத் தலங்களில் எவ்வித பாகுபாடும் இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தியுள்ளது.



