சென்னை அடுத்த கும்மிடிப்பூண்டி முதல் ஆந்திராவின் கூடூர் வரை 3 மற்றும் 4-ஆவது ரயில் வழித்தடங்களை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக ரூ.2,229 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ரூ.13,041 கோடி மதிப்பீட்டில் 5 புதிய ரயில்வே திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.


