சட்டமன்றத்தில் இஸ்லாமியர்களின் பிரதிநிதித்துவம் மற்றும் பாதுகாப்பு குறித்த விவாதம் நடைபெற்றது. இதில் தவெக எம்எல்ஏ பக்ருதீன் பேசுகையில், ஒரு இஸ்லாமியராக தான் நசுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். அதேசமயம், இஸ்லாமியர்கள் 13 பேர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்ததற்காக முதல்வர் விஜய்க்கு அவர் நன்றி தெரிவித்தார்.
இந்தக் கருத்துக்குப் பதிலளித்த முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, இஸ்லாமியர்களுக்குப் பாதுகாப்பாக இருந்து வரும் திமுகவை தவெக எம்எல்ஏ விமர்சிப்பதாகக் குற்றம் சாட்டினார். தமிழகத்தைப் பொறுத்தவரை இஸ்லாமியர் விவகாரம் மிகவும் உணர்வுப்பூர்வமான ஒன்று என அவர் தெரிவித்தார்.



