சேலம் மாவட்டம், மேட்டூர் வனப்பகுதிக்கு உட்பட்ட சின்னமலை பகுதியில் சிறுத்தை ஒன்று சுற்றித் திரிவது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பான காட்சிகள் அப்பகுதி மக்களால் செல்போனில் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
சிறுத்தை ஊருக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் வனத்துறையினர் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


