செயின்ட் லூயிஸில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா ரமேஷ்பாபு சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில், அமெரிக்காவின் பேபியானோ கருணாவை 15-13 என்ற புள்ளிக் கணக்கில் அவர் வீழ்த்தினார். போட்டியின் கடைசி நாளில் ஆறு புள்ளிகள் பின்தங்கியிருந்த நிலையில், பிரக்ஞானந்தா ரேபிட் ஆட்டங்களில் வெற்றி பெற்று, பிளிட்ஸ் சுற்றிலும் தனது முன்னிலையைத் தக்கவைத்துக்கொண்டு இந்த வெற்றியைப் பதிவு செய்தார்.
கிராண்ட் செஸ் டூர் தொடரை வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை பிரக்ஞானந்தா படைத்துள்ளார். இதன் மூலம் அவருக்கு 2,00,000 அமெரிக்க டாலர் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
கிளாசிக்கல் ஆட்டங்களில் 6-0 என்ற கணக்கில் பின்தங்கியிருந்த நிலையில், தொடரின் இறுதியில் அவர் இந்த வெற்றியைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, மூன்றாம் இடத்திற்கான போட்டியில் வின்சென்ட் கீமரை எதிர்கொண்ட வெஸ்லி சோ, 18-12 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றார்.



