நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர்களைப் பாதுகாப்பாக மீட்டு வருவது குறித்து, வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியை தமிழக அமைச்சர்கள் சந்தித்துப் பேசினர். டெல்லியில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜமோகன், வினோத் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் பங்கேற்றனர்.
இவர்களுடன் தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி வெங்கட்நாராயணா, முதன்மை வதிவிட ஆணையர் ஜெயா மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நல ஆணையர் சதீஷ் ஆகியோரும் உடனிருந்தனர்.
நேபாளத்திற்குச் சுற்றுலா மற்றும் பல்வேறு காரணங்களுக்காகச் சென்றிருந்த தமிழக மக்களின் தற்போதைய நிலை, அவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களைத் தாயகம் அழைத்து வருவதற்குத் தேவையான உதவிகளை மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்வது குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.




