முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி, ஆலங்குடி அதிமுக வேட்பாளர் தனவிமல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தன்னிடம் பெற்ற ரூ.4 கோடியைத் திருப்பித் தராமல் ஏமாற்றிவிட்டதாக அவர் தனது மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.


