நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். காவிரி ஆற்றின் மாசுபாட்டைத் தடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம், அதிமுக ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி உதவியுடன் இத்திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. எனவே, காவிரி ஆற்றின் சூழலியலைப் பாதுகாக்கும் நோக்கில், இந்தத் திட்டத்திற்கு முன்னுரிமை அளித்துச் செயல்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
