கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததால் 65 பேர் உயிரிழந்த விவகாரத்தில், 12 துறை அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் என ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையிலான ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2024-ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்த மரணங்கள் குறித்து ஆணையம் விசாரணை நடத்தியது.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட 12 துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்யத் தவறியதாகவும், எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான விசாரணை தொடங்கவும் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

