மும்பையில் இன்று நடைபெறவுள்ள நிதி தொழில்நுட்ப மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இந்த நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு துப்பாக்கியுடன் வந்த இருவரை மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் பிரதமர் அலுவலகத்தின் போலி அடையாள அட்டைகளை வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. பிரதமரைத் தாக்குவதற்காக அவர்கள் துப்பாக்கியுடன் வந்தார்களா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



