கேரள முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன் மீது முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்யுமாறு கேரள காவல்துறையிடம் அமலாக்கத்துறை முறைப்படி கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கையில் பினராயி விஜயனின் மகள் டி. வீணா மற்றும் மருமகன் பி.ஏ. முகமது ரியாஸ் ஆகியோரின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த மூவர் மீதும் சுமத்தப்பட்டுள்ள ஊழல் புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த புகார்களின் பேரில் சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடங்குமாறு காவல்துறையிடம் அமலாக்கத்துறை வலியுறுத்தியுள்ளது.



