தமிழ்நாட்டில் ரூ.11,000 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தத்தில் சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது. லண்டனில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அந்நிறுவனம் தனது ஐரோப்பிய மற்றும் இங்கிலாந்து கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து இந்த முதலீட்டுத் திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்த முதலீடு தொடர்பான முறையான ஒப்பந்தம் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்துடன் (Guidance Tamil Nadu) மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் அரசு மற்றும் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

