தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்குச் சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் தனி வார்டுகளை உடனடியாக அமைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் தேவையான மருந்துகள், ரத்தத் தட்டணுக்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் 24 மணி நேரமும் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

