தமிழக சட்டப்பேரவையில் பயிர் கடன் தள்ளுபடி குறித்த முக்கிய அறிவிப்புகளை முதல்வர் விஜய் வெளியிட்டார். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு லட்சம் ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 75 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படும். அதேபோல், 75 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற்றவர்களுக்கு முழுமையான கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

