கனிமவளக் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் எச்சரிக்கை விடுத்துள்ளார். மக்கள் சொத்தான கனிம வளங்களைக் கைப்பற்ற நினைப்பவர்களை மக்கள் தேர்தலில் தோற்கடிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மதுரையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் கனிம வளங்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும், நடந்து முடிந்த தேர்தலில் அவரால் டெபாசிட் கூட பெற முடியவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சைக்கிளில் வந்தவர்கள், இன்று மருத்துவக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளைக் கட்டியிருப்பதே கனிமவளக் கொள்ளைக்கு ஆதாரம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டினார்.



