சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் ஜோசப் விஜய் இன்று புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார். இந்த வாரத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக அவர் இத்தகைய அறிவிப்புகளை வெளியிடவிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து, இன்று மாலை பள்ளிக்கரணை சதுப்புநிலம் மற்றும் வேளச்சேரி ஏரியை முதல்வர் நேரில் ஆய்வு செய்ய உள்ளார். தனது அதிகாரப்பூர்வ பயணத்தின் ஒரு பகுதியாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

