இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நேரில் சென்று விசாரித்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வீரபாண்டியனைச் சந்தித்த அமைச்சர்கள், அவரது உடல்நிலை மற்றும் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனர்.


