தமிழகத்தில் உள்ள அனைத்துக் கடைகளின் பெயர் பலகைகளையும் நவம்பர் 1-ஆம் தேதிக்குள் தமிழில் மாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெயர் பலகைகளை தமிழில் மாற்றத் தவறினால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதி சுரேந்தர் எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என கடந்த 2025 ஜூன் மாதம் தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவைச் செயல்படுத்தும் வகையில் தற்போது நீதிமன்றம் இந்த காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது.


